தேனியில் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்

தேனியில் அதிக மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

Update: 2022-07-25 15:38 GMT

தேனியில் ஆட்டோக்களில் மாணவ, மாணவிகளை அதிக எண்ணிக்கையில் ஏற்றிக் கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் தேனி என்.ஆர்.டி. நகரில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆட்டோக்களில் 12-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை சிலர் ஏற்றி வந்தனர். அதுபோன்ற அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றி வந்த 12 ஆட்டோ டிரைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த டிரைவர்களுக்கு மொத்தம் ரூ.8 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்