கடம்பூரில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

108 ஆம்புலன்சில்;

Update:2022-11-22 01:00 IST

கடம்பூர் அருகேயுள்ள காடகநல்லி மலைகிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை பிரசவவலி ஏற்பட்டது.

உடனே கடம்பூரில் உள்ள 108 ஆம்புலன்சிற்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த 108 ஆம்புலன்சில் சிவகாமி ஏற்றப்பட்டு, சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். கடம்பூர் கடைவீதி அருகே சென்றபோது அவருக்கு பிரசவ வலி அதிகமானது. உடனே அங்கேயே ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு, மருத்துவ உதவியாளர் விஜய் பிரசவம் பார்த்தார். அப்போது சிவகாமிக்கு அழகான ஆண் குழந்ைத பிறந்தது. பின்னர் தாயும், சேயும் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்கள். தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் உள்ளார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்