தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரிப்பு

தர்மபுரி ஏல அங்காடிக்கு பட்டுக்கூடுகள் வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2022-10-17 19:30 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று பட்டுக்கூடுகள் வரத்து 5 டன் 894 கிலோவாக அதிகரித்தது. நேற்று அதிகபட்சமாக ரூ.731-க்கும், குறைந்தபட்சமாக ரூ.285-க்கும், சராசரியாக ரூ.536.68-க்கும் பட்டுக்கூடுகள் விற்பனையானது. மொத்தம் ரூ.31 லட்சத்து 63 ஆயிரத்து 332 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்