நாமக்கல் அருகேகார் கவிழ்ந்து 4 பேர் காயம்

Update: 2023-09-04 19:00 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள நாகவதி அணை பகுதியை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் அன்புசெல்வன் (வயது 18). இவரும், இவருடைய உறவினர்கள் சிலரும் ராமேஸ்வரம், பழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு காரில் ஆன்மிக சுற்றுலா சென்றனர்.

நேற்று முன்தினம் மாலை நாமக்கல் வழியாக தர்மபுரிக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். நாமக்கல் முதலைப்பட்டி மேம்பாலம் அருகில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் அன்புசெல்வன், அன்புசெல்வி (16), அஸ்வினி (19), அஞ்சலி (16) ஆகியோர் காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்