நகைக்கடை தொழிலாளி தற்கொலை

ஆம்பூர் அருகே நகைக்கடை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-22 16:14 GMT

ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40), நகைக்கடையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் ஆறுமுகம் கழுத்தை அறுத்து கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டாா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்