கள்ளக்குறிச்சி கலவரம்: போலீசார் மீது கற்கள் வீசி தாக்கி வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது போலீசார் மீது கற்கள் வீசி தாக்கி வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-09-08 15:02 GMT

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது.இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துக்கள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துக்களக சேதப்படுத்தியவர்களை கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த கலவரத்தில் போலீசார் மீதும், போலீஸ் வாகனம் மீதும் கற்கள் வீசி வன்முறையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா முல்லைவாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் (வயது-20) என்பவரை வீடியோ ஆதாரங்கள் வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்