கல்லூரி மாணவி கடத்தல்

திட்டக்குடியில் கல்லூரி மாணவி கடத்தல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-25 20:07 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி தாலுகா வள்ளி மதுரம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ஆதி. இவரது மகள் நிரஞ்சனா(வயது 17). இவர் திட்டக்குடி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 20-ந் தேதி காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற நிரஞ்சனா பின்னர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும், அவர் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நிரஞ்சனாவை கள்ளக்குறிச்சி மாவட்டம் காலசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த அபினேஷ்(24) என்பவர் கடத்திச் சென்றிருப்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்