மாணவிக்கு பாராட்டு

போட்டியில் சாதனை படைத்த மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-09-29 22:00 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

மாநில அளவில் கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இடையே வணிகவியல்துறை சார்பிலான போட்டி ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் வணிகவியல் துறை சார்பில் கலந்து கொண்ட வி.பி.எம்.எம். கல்லூரி மாணவி அபிநயஸ்ரீ என்பவருக்கு முதல் பரிசு கிடைத்தது. முதல் பரிசு பெற்ற மாணவியை கல்லூரி சேர்மன் டாக்டர் வி.பி.எம்.சங்கர், தாளாளர் பழனி செல்வி சங்கர் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்