லாரி மோதி தொழிலாளி பலி

லாரி மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-28 18:45 GMT

கரூர் புது குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சரவணன்(வயது 24). இதேபோல் வெண்ணைமலை காதப்பாறை காமராஜ் நகரைச் சேர்ந்தவர் சோழன்(29). இருவரும் கூலி தொழிலாளிகள் ஆவர். சம்பவத்தன்று இவர்கள் இருவரும் கரூர்- திருச்சி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். புலியூர் அருகே உள்ள ஒரு தனியார் சிமெண்டு ஆலை அருகே சென்றபோது, அந்த வழியே வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் பலத்த காயமடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரவணனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காயம் அடைந்த சோழன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்