கனமழை காரணமாக தரைப்பாலம் மூழ்கியது

ஆம்பூர் அருகே கனமழை காரணமாக தரைப்பாலம் மூழ்கியது

Update: 2022-08-05 18:22 GMT

தமிழகம் மற்றும் ஆந்திர எல்லை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.

இதன் காரணமாக ஆம்பூர் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பச்சகுப்பம் பகுதியில் இருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு தரைப்பாலத்தை மூழ்கியபடி நீர்வழிந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் வழியாக சென்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்