தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

Update: 2022-06-23 20:28 GMT

திருச்சி:

லால்குடி அருகே பம்பரம்சுற்றி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணிசாமி. இவரது மனைவி கலாராணி(வயது 63). இவர்களது மகன் ராஜ்குமார்(40). இவர் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார், கலாராணியை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்தார். இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி 3-வது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தங்கவேல் நேற்று கூறினார். அதில், குற்றம் சாட்டப்பட்ட ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்