தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

தடுப்புக்காவல் சட்டத்தில் சாராய வியாபாரி கைது

Update: 2023-05-29 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் ஜி.ஆர்.பி. தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன்(வயது 55). இவர் மீது சாராயம் கடத்தியதாகவும், விற்பனை செய்ததாகவும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு சாராய வழக்கில் கிருஷ்ணனை விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் இவருடைய குற்ற செயல்களை தடுக்கும்பொருட்டு தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யும்படி மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் பழனி உத்தரவின் பேரில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார், கிருஷ்ணனை தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல் கடலூர் சிறையில் இருக்கும் அவருக்கு சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்