சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-16 18:44 GMT

வாலாஜா தாலுகா, பொன்னை ரோடு சத்திரம்புதூர் கொண்டகுப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47). அதே பகுதியில் சாராயம் விற்றதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். இவரின் குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி பரிந்துரையின் பேரில், ரமேஷை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்