மது விற்றவர் கைது

நெல்லையில் மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-30 19:20 GMT

நெல்லை தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாழையூத்து பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த நபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் தாழையூத்து குறிச்சிகுளம் பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 56) என்பதும், மதுபாட்டில்கள் விற்றுக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்