ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் பதுக்கி வைத்து மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அப்பகுதிக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு மது விற்றவரை பிடித்து விசாரித்தபோது, அவர் ஜெயங்கொண்டம் வடக்குத்தெருவை சேர்ந்த ஜோதிராமலிங்கத்தின் மகன் பாலகுரு(வயது 30) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பாலகுருவை கைது செய்து, அவரிடம் இருந்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.