மது விற்றவர் கைது

மது விற்றவரை போலீசாா் கைது செய்தனா்.

Update: 2023-06-17 22:03 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள கெட்டிச்செவியூர் பகுதியில் சிறுவலூர் போலீசார் ரோந்து ெசன்றனர். அப்போது அங்குள்ள சந்தை கடை அருகே சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன், ஒருவர் நின்றுகொண்டு இருந்தார். இதனால் போலீசார் அவர் வைத்திருந்த பையை வாங்கி சோதனை செய்து பார்த்தனர். அதில் 6 மதுபாட்டில்கள் இருந்தன.

இதனால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் செஞ்சிலாம்பாளையத்தை சேர்ந்த செல்வம் (வயது 43) என்பதும், அங்கு நின்றுகொண்டு அவர் திருட்டுத்தனமாக மது விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்து அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்