மதுபாட்டில்கள் கடத்தியவர் கைது

மதுபாட்டில்கள் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-08 18:46 GMT

ஆண்டிமடம் 

ஆண்டிமடம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் ஆண்டிமடம் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து விசாரணை நடத்தியதில் ஆண்டிமடம் மெயின் ரோட்டை சேர்ந்த சுப்புராஜ்(வயது 28) என்பவர் 100 மது பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, அவர் கொண்டு சென்ற மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்