லாரி டிரைவருக்கு 1½ ஆண்டு சிறை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லாரி டிரைவருக்கு 1½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.;
சாணார்பட்டி அருகே உள்ள கொத்தப்புளிபட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 36). லாரி டிரைவர். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட மாணிக்கத்துக்கு 1½ ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.