அக்னி தீர்த்த கடற்கரையில் ஆண் பிணம்

அக்னி தீர்த்த கடற்கரையில் ஆண் பிணம் கிடந்தது.

Update: 2023-08-24 18:45 GMT

ராமேசுவரம், 

ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை தெற்கு பகுதியில் இறந்த நிலையில் ஆண் பிணம் கரை ஒதுங்கி கிடப்பதாக கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையிலான போலீசார் அங்கு சென்று இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்். அதில் இறந்தவருக்கு 55 வயது இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். அவர் வெள்ளை நிற வேட்டி, வெள்ளை நிற சட்டை அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. பின்னர் அவரது உடலை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்