கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-21 19:05 GMT

வடக்கன்குளம்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜிம் கண்ணன். இவர் கடந்த 2014-ம் ஆண்டு நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள பெருமணலில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கில் தொடர்பு உடையவர் ஆவார். அவரை பழவூர் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் உத்தரவின் பேரில், ஜிம் கண்ணனை பிடிக்க பணகுடி இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையில் பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் அனீஸ்குமார் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஜிம் கண்ணனை நேற்று கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்