காரைக்குடி,
கோவிலூர் மடாலய குருபூஜையை முன்னிட்டும், போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் மாணவ, மாணவிகளுக்கான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கோவிலூர் ஆதீனம் சீர் வளர்சீர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.