அரிசி கடை அதிபர் மாயம்

கரூர் அருகே அரிசி கடை அதிபர் மாயம் ஆனார்

Update: 2023-10-13 18:36 GMT

கரூர் ஆண்டாங்கோவில் கீழ்ப்பாக்கம் எல்.என்.எஸ். அம்மன் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 67). அரிசி கடை அதிபர். இவர் கடந்த 11-ந்தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மாலை ெவகுநேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில், கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து மாயமான செல்வராஜை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்