குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2022-06-30 17:19 GMT

சிவகங்கை, 

சிவகங்கை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 5-ந்் தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மான அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் சந்திரா தலைமையில் நடைபெறுகிறது. சிவகங்கை கோட்டத்திற்கு உட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்த தகவலை மேற்பார்வை பொறியாளர் சந்திரா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்