மோட்டார் சைக்கிள் திருட்டு

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-09-08 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

பூதப்பாண்டி அருகே உள்ள அழகியபாண்டியபுரம் உலக்கை அருவி சர்ட்டர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன் நிறுத்தியிருந்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மா்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து பூதப்பாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்