தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் கடைவீதியில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் கடைவீதியில் அலைமோதிய பொதுமக்கள் கூட்டம்;
வருகிற 24-ந் தேதி தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜவுளி, நகை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. விடுமுறை நாளான நேற்று கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
நாமக்கல் கடைவீதி, பிரதான சாலை, சேலம் சாலை பகுதிகளில் உள்ள கடைகளில் ஜவுளி மற்றும் நகைகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். இதனால் பிரதான சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர்.