தமிழில் பெயர் பலகைகள்; ஈரோட்டில் விழிப்புணர்வு நிகழ்ச்சி - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்

பெயர் பலகைகளில் தமிழ் மொழி இடம்பெற வேண்டும் என்ற அரசாணை உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

Update: 2024-01-31 11:21 GMT

மயிலாடுதுறை,

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-

"கடைகள், வணிக நிறுவனங்களில் வைக்கப்படும் பெயர் பலகைகளில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியும் குறிப்பிட்ட அளவில் இருக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. இது தொடர்பாக ஈரோட்டில் வரும் 2-ந்தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விரைவில் அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகைகள் வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்."

இவ்வாறு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். 


Full View


Tags:    

மேலும் செய்திகள்