ஆறுமுகநேரி அருகே காட்டிற்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

ஆறுமுகநேரி அருகே காட்டிற்குள் பிணமாக கிடந்தவர் அடையாளம் தெரிந்தது

Update: 2023-07-04 18:45 GMT

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரி - குரும்பூர் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று முன்தினம் ஆண் பிணம் ஒன்று கிடந்தது. ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரபகுமார், தமிழ்ச்செல்வன், மற்றும் போலீசார் அந்தபகுதிக்கு சென்று இறந்த கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு நடத்தி விசாரணை நடத்தினர். இதில், பிணமாக கிடந்தவர், ஆறுமுகநேரி பெருமாள்புரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மாசானம் மகன் கருப்பசாமி (வயது 55). விவசாயி. இவருக்கு முத்துமாலை என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் காட்டிற்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தது தெரிய வந்துள்ளது. அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்