கயத்தாறு அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

கயத்தாறு அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-20 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகே தெற்குமயிலோடை பஞ்சாயத்தை சேர்ந்த தலையால்நடந்தான்குளம் வடக்கு தெருவில் வசித்து வருபவர் திருவாளி. விவசாயி. இவரது மகன் சண்முகராஜ் (வயது 32). இவருக்கு முத்தம்மாள்(28) என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இவரது மனைவி குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிலுள்ள ஒரு அறையில் தூங்க சென்றுள்ளார். நேற்று அதிகாலையில் அவரது தாயார் எழுந்து பார்த்தபோது, சண்முகராஜ் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் போட்ட கூச்சலில் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து, அவரது உடலை தூக்கிலிருந்து இறக்கியுள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை 

Tags:    

மேலும் செய்திகள்