கள்ளழகர் உள்பட 3 கோவில்களின்உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
கள்ளழகர் கோவில் உள்பட 3 கோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.;
அழகர்கோவில்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் அங்குள்ள உண்டியல்கள் திறந்து எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதில் ரூ.41 லட்சத்து 14 ஆயிரத்து 45 ரொக்கமும், தங்கம் 22 கிராமும், வெள்ளி 175 கிராமும், இருந்தது. தொடர்ந்து ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்து 976 ரொக்கமும், தங்கம் 8 கிராமும், வெள்ளி 242 கிராமும் இருந்தது. வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தது. பின்னர் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலின் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூ.6 லட்சத்து, 35 ஆயிரத்து 915 ரொக்கமும், தங்கம் 38 கிராம், வெள்ளி 88 கிராமும், இருந்தது. இதில் மொத்தம் ரூ.54 லட்சத்து, 24 ஆயிரத்து 936 இருந்தது.
உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, உதவி ஆணையர் வளர்மதி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, ஆய்வாளர் அய்யம்பெருமாள், கண்காணிப்பாளர்கள் அருள் செல்வம், பிரதீபா மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் உடன் இருந்தனர்.