ஆட்சிமொழி கருத்தரங்கு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் ஆட்சிமொழி கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-02-09 19:00 GMT

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆட்சிமொழி பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி பேசினார். 2020-ம் ஆண்டு ஆட்சிமொழி செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தேனி அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு கேடயத்தை கலெக்டர் வழங்கினார். மேலும், 2021-ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற தேனியை சேர்ந்த எழுத்தாளர் தேனி சீருடையானுக்கு சால்வை அணிவித்து கலெக்டர் கவுரவித்தார்.

இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சிமொழி வரலாறு, ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள், கணினித் தமிழ், மொழிப்பயிற்சி, அலுவலக குறிப்புகள், கடித வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பெயர்ப்பு போன்றவை குறித்து தமிழறிஞர்கள் பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் சந்திரா, உதவி இயக்குனர் இளங்கோ மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்