புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா

புதிய பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.;

Update:2023-07-26 00:41 IST

இட்டமொழி:

களக்காடு அருகே உள்ள சீவலப்பேரி ஊராட்சி எஸ்.என்.பள்ளிவாசல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதி ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் சந்திரசேகர், ராஜகோபால், சீவலப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் அய்யம்மாள், துணைத்தலைவர் லலிதா, வட்டார தலைவர்கள் அலெக்ஸ், காளப்பெருமாள், களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், மகளிர் காங்கிரஸ் குளோரிந்தாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்