மடிக்கணினிகளில் எடப்பாடி பழனிசாமி புகைப்படத்தை நீக்க உத்தரவு..!

இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-07-14 03:32 GMT

சென்னை,

கல்வித்துறை வசமுள்ள இலவச மடிக்கணினிகளில் முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை நீக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் மடிக்கணினிகள் விநியோகிக்க முடியாத நிலையில் கல்வித்துறை வசம் வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சியில் இருப்பதால் மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை அகற்றுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்