தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு அபராதம்
தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தக்கலை,
தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய லாரிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதிப்பு
தக்கலை போலீசார் நேற்று காலை தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிக்கு ரூ.29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.