திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம்
திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.;
திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை வாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். இதில் 50 மனுக்கள் பெறப்பட்டன.
பின்னர் மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.