லியோ திரைப்படம் 5 காட்சிகள் திரையிட அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லியோ திரைப்படம் 5 காட்சிகள் திரையிட கலெக்டர் சரயு அனுமதி.

Update: 2023-10-17 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே.எம்.சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தியேட்டர்களில் `லியோ' திரைப்படத்திற்கு கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி (ஒரு நாளைக்கு 5 காட்சிகள்) நாளை முதல் 24-ந் தேதி வரை திரையிடப்பட உள்ளது. தொடக்க காட்சி காலை 9 மணிக்கும், கடைசி காட்சி இரவு 1.30 மணியளவில் முடியும் வகையில் திரையிடப்பட உள்ளது.

எனவே கூடுதல் காட்சிகள் திரையிடப்படும் தியேட்டர்களில் கூட்ட நெரிசல், சுகாதார குறைபாடு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். மேலும் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கவும், விதிமீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

எனவே மாவட்டத்தில் தியேட்டர் உரிமையாளர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்றவும், சிறப்பு கண்காணிப்பு குழு மற்றும் புகார்கள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்