அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கான மிகை ஊதியம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Update: 2024-01-05 14:17 GMT

சென்னை,

தமிழக அரசு கூறியதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு

*'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு ரூ 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்

*சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர, பகுதி நேரப் பணியாளர்களுக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம்

*சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும்

*பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் அரசிற்கு 167 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்

Tags:    

மேலும் செய்திகள்