நாளை மின்சாரம் நிறுத்தம்
உஞ்சனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
எலச்சிபாளையம்
நாமக்கல் மின் பகிர்மான வட்டம் திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட உஞ்சனை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உஞ்சனை, சாலப்பாளையம், குமரமங்கலம், ராயர் பாளையம், சடையகவுண்டம்பாளையம், ஆலங்காட்டு புத்தூர், சத்திய நாயக்கன்பாளையம், மண்டகப்பாளையம், 85கவுண்டம்பாளையம், பூவாழக்குட்டை, முகாசி, போக்கம்பாளையம், சமுத்திரம் பாளையம், மோளிப்பள்ளி, மாச்சம் பாளையம், கோலாரம் கரிச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இந்த தகவலை திருச்செங்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளார்.