அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது - ஐகோர்ட் கருத்து

அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-07-09 12:43 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தியாகராஜன், மாலதி ஆகியோர் தாக்கல் செய்த மனு ஒன்று இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு பணிகளில் இருந்து அரசு ஊழியர் தானே விலகினால், அந்த பணிக்காலத்தை விட்டுக் கொடுத்துவிட்டதாகத் தான் கருத முடியும் என குறிப்பிட்டனர்.

இதனால் அரசு பணிகளில் இருந்து தாமாக விலகுபவர்களின் முந்தைய பணிப்பயன்களை கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்