தனியார் நிறுவன ஊழியர் சாவு

தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-08-29 17:15 GMT

கரூர் ஆத்தூர் சுந்தரம்நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). தனியார் நிறுவன ஊழியரான இவர், நேற்று முன்தினம் ஆத்தூர் அருகே உள்ள தனியார் அச்சகம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது தடுமாறி கீழே விழுந்து செந்தில்குமார் படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதின்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்