பொதுமக்கள் திடீர் மறியல்

தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-01 19:00 GMT

திருச்செந்தூரில் இருந்து பெங்களூரு நோக்கி அரசு விரைவு பஸ் நேற்று இரவு வந்தது. அந்த பஸ் தூத்துக்குடி போல்டன்புரம் அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அந்த மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த அந்த பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தென்பாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அந்த ரோட்டில் போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்