ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்வு - தெற்கு ரெயில்வே

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2022-09-29 13:31 GMT

சென்னை,

சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட 8 ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் உயர்த்தப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை சென்ட்ரல்,எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி ஆகிய 8 ரெயில் நிலையங்களிள் நடைமேடை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

விழாக்காலங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் ரெயில் நிலையங்களின் நடைமேடை கட்டணம் ரூ.10 லிருந்து ரூ.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இந்த கட்டண உயர்வானது வருகிற 2023-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்