தாளவாடியில் மரம் முறிந்து பெட்டிக்கடை மீது விழுந்தது

தாளவாடியில் மரம் முறிந்து பெட்டிக்கடை மீது விழுந்தது

Update: 2022-08-02 21:40 GMT

தாளவாடி

தாளவாடி போலீஸ் நிலையம் முன்பு பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. கடந்த சில நாட்களாக தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் விட்டு விட்டு தொடர்ந்து காற்றுடன் மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று காலை 11 மணியளவில் போலீஸ் நிலையம் முன்பு இருந்த ஆலமரத்தின் ஒரு பகுதி கிளை திடீரென முறிந்து அங்குள்ள மின்கம்பி மீதும், அதன் கீழே இருந்த பெட்டிக்கடை மீதும் விழுந்தது.

இதில் மின் கம்பி அறுந்து விழுந்தது. பெட்டிக்கடையும் சேதம் ஆனது. மரம் விழுந்ததும் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. அதனால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. அதன்பின்னர் அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். பின்னர் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பும் சரிசெய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்