அழுகிய நிலையில் டிரைவரின் உடல் மீட்பு

கோத்தகிரி அருகே அழுகிய நிலையில் டிரைவரின் உடல் மீட்கப்பட்டது.

Update: 2023-10-04 19:15 GMT


கோத்தகிரி அருகே உள்ள எஸ். கைகாட்டி, கஸ்தூரிபா நகரைச் சேர்ந்தவர் சேகர் (வயது 53). இவர் சொந்தமாக லாரி வைத்து அதனை ஒட்டி வருகிறார். இந்தநிலையில் இவர் தனது லாரியை கடந்த 2 மாதங்களுக்கு முன் ஒர்க் ஷாப்பில் பராமரிப்புக்கு விட்டுள்ளார். மேலும் அவர் குடும்ப கஷ்டம் காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 16ிந்தேதி காலை தனது வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எனவே அவரது குடும்பத்தார் அவரைத் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால், கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் கோத்தகிரி மிஷண் காம்பவுண்ட் செல்லும் சாலையோரத்தில் உள்ள சோலையில் தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது இறந்து போனவர் சேகர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்