ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Update: 2022-10-19 19:39 GMT

கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், கருப்பத்தூர் ஊராட்சி, வேங்காம்பட்டி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக இலவசமாக கொடுக்கப்பட்ட வீட்டுமனை பட்டா இடங்களில் தனிநபர் ஒருவர் 15 சென்ட் நிலத்தை வேலி போட்டு சுமார் 8 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மோகன்ராஜ் தலைமையிலான வருவாய்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இருந்த முள்வேலியை அகற்றினர். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் இந்துமதி, வட்ட நில அளவையர் பெரியசாமி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்