அரவைக்காக 2,000 டன் நெல்

நாகையில் இருந்து தர்மபுரிக்கு அரவைக்காக 2,000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2022-06-14 17:42 GMT

நாகப்பட்டினம்:

விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடி கொள்முதல் நிலையங்களின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் திருப்பூண்டி, சன்னமங்கலம், காடம்பாடி, அருந்தவன்புலம், கொத்தங்குடி, சாட்டியகுடி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.பணி நடைபெற்று வருகிறது. அதன்படி நாகையில் இருந்து சரக்கு ெரயிலில் 2,000 டன் சன்னரக நெல் அரவைக்காக சரக்கு ரெயிலில் தர்மபுரிக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி நாகையில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் நாகை ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ெரயிலின் 42 வேகன்களில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு நெல் மூட்டைகளுடன் தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்