தர்மபுரி அங்காடியில்ரூ.11 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

Update: 2023-08-14 19:30 GMT

தர்மபுரி:

தர்மபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு நேற்று 2,294 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.607-க்கும், குறைந்தபட்சமாக ரூ.258-க்கும், சராசரியாக ரூ.480.70-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Tags:    

மேலும் செய்திகள்