மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-04 18:45 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த செல்லப்பனேந்தல் பகுதியில், வைகை ஆற்றில் இருந்து அனுமதி இல்லாமல் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்புவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தி தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வைகை ஆற்றிலிருந்து அனுமதி இல்லாமல் மோட்டார்சைக்கிளில் 6 சாக்குகளில் மணல் அள்ளி கடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா(வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்