மணல் கடத்தியவர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-18 19:59 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நத்தம்பட்டி அருகே உள்ள பகுதிகளில் சப்-இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும், டிராக்டரில் வந்தவர் நடராஜன் (வயது40) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்