மணல் கடத்தல்; லாரி பறிமுதல்

மணல்மேடு அருகே மணல் கடத்தல்; லாரி பறிமுதல் டிரைவர் கைது செய்யப்பட்டார்;

Update:2022-08-28 23:21 IST

மணல்மேடு:

மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மணல்மேடு அருகேபட்டவர்த்தி மதகடி பகுதியில் சென்ற ஒரு லாரியை நிறுத்தினர். அப்போது லாரியில் இருந்து ஒருவர் தப்பி ஓடி விட்டார். இதை தொடர்ந்து லாரியில் இருந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சீர்காழி வள்ளுவக்குடி மெயின் ரோட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் பாலாஜி (வயது 27) என்பதும், கொள்ளிடம் ஆற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தி சென்றதும் தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பாலாஜியை கைது செய்து செய்து லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய லாரி உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்