ஏரிக்கரைகளில் மரக்கன்று நடும் விழா

வாணாபுரத்தில் ஏரிக்கரைகளில் மரக்கன்று நடும் விழாவை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்தார்

Update: 2022-08-06 13:05 GMT

வாணாபுரம்

வாணாபுரம் ஏரி மற்றும் குளம், அரசுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு ெதாடங்கி வைத்தார்.

தொடர்ந்து அப்பகுதிகளில் மா, பலா, புளி, புங்கன், பூவரசு, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் நட்டு பேசினார்.

அப்போது மரங்களை வளர்ப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தொடர்ந்து மரங்களை வளர்ப்பது மட்டுமே ஊராட்சியின் முக்கிய பங்காக இருக்க வேண்டும் என்றும், மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,

குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள இடங்களில் மரங்களை நட்டு பராமரிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதில் உதவி திட்ட இயக்குனர் (பொறுப்பு) உமா, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஏழுமலை, ஊராட்சி செயலர் செல்வம், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்